Thursday, January 16, 2025
Google search engine
Homeஇந்தியாரேணுகாசாமி கொலை வழக்கு; கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்

ரேணுகாசாமி கொலை வழக்கு; கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகரான ரேணுகாசாமியை கொலை செய்திருந்தார். இதுதொடர்பாக பெங்களூரு காமாட்சி பாளையா போலீசார் தர்ஷனை கைது செய்து பல்லாரி சிறையில் அடைத்தார்கள். சிறையில் முதுகு வலியால் அவதிப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை செய்து கொள்ள கர்நாடக ஐகோர்ட்டு 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து, அவர் பெங்களூரு கெங்கேரி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், கர்நாடக ஐகோர்ட்டில் நிரந்தர ஜாமீன் கோரியும் தர்ஷன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணையின்போது கடந்த 9-ந்தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்திருந்தார். அதே நேரத்தில் நேற்று வரை தர்ஷனுக்கு அறுவை சிகிச்சை நடைபெறவில்லை.

இந்த நிலையில், நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணியளவில் அறிவிக்கப்படும் என்று கர்நாடக ஐகோர்ட்டு தெரிவித்தது. அதன்படி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 9 பேருக்கு ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments