Thursday, January 16, 2025
Google search engine
Homeவிளையாட்டுபார்டர் - கவாஸ்கர் கோப்பை கடைசி டெஸ்ட்: இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விலகல்

பார்டர் – கவாஸ்கர் கோப்பை கடைசி டெஸ்ட்: இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விலகல்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ‘பார்டர்- கவாஸ்கர்’ கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 3-வது டெஸ்ட் மழையால் ‘டிரா’ ஆனது. மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டியிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் விலகியுள்ளதாக தலைமை பயிற்சியாளர் கம்பீர் அறிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கம்பீர், முதுகு வலி காரணமாக ஆகாஷ் தீப் கடைசி போட்டியிலிருந்து விலகியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் சிட்னி மைதானத்தை பார்த்த பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments