Saturday, March 15, 2025
Google search engine
Homeஇந்தியா"இன்று பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும்" - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

“இன்று பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும்” – அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

மிக்ஜம் புயல் காரணமாக ஆவின் பால் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் பால் பாக்கெட்டுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று காலை அனைத்து முகவர்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “பால் வினியோகத்தை நேரடியாக கண்காணித்து ஒவ்வொரு பகுதிகளுக்கும் வாகனங்கள் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. நாளை (இன்று) காலை அனைத்து முகவர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு தட்டுப்பாடு இன்றி பால் கிடைக்கும்” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments