Tuesday, October 22, 2024
Google search engine
Homeஉலகம்நேபாளத்தில் கனமழை; வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் கனமழை; வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி நேபாளத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Previous articleஅமெரிக்காவில் நாளுக்குநாள் துப்பாக்கி சூடு, கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டிட்ரியோட் நகரில் வாரவிடுமுறை நாளான நேற்று இரவு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 19 பேர் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடி நபர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Next articleயுவனின் இசையை கொண்டாட ஓர் அறிய வாய்ப்பு- மின்மினி செயலி சிறப்பு போட்டி அறிவிப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments