Tuesday, October 22, 2024
Google search engine
Homeஉலகம்ஆஸ்திரியா சென்றடைந்தார் பிரதமர் மோடி

ஆஸ்திரியா சென்றடைந்தார் பிரதமர் மோடி

22வது இந்தியா – ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி நேற்று முன் தினம் ரஷியா சென்றார். அங்கு அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்தார். இதன் பின்னர், நேற்று நடந்த இந்தியா – ரஷியா உச்சி மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் இருநாட்டு உறவு, வர்த்தகம், ராணுவம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர். பின்னர், உக்ரைன் போர் குறித்தும் விவாதித்தனர்.

இந்நிலையில், 2 நாள் ரஷிய பயணத்தை முடித்த பிரதமர் மோடி அங்கிருந்து ஆஸ்திரியா புறப்பட்டு சென்றார். விமானம் மூலம் ஆஸ்திரியா சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆஸ்திரியா அதிபர் அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments