Sunday, March 16, 2025
Google search engine
Homeஇலங்கைஅஞ்சல் தொலைத்தொடர்பு தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தம்

அஞ்சல் தொலைத்தொடர்பு தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தம்

அஞ்சல் தொலைத்தொடர்பு தொழிற் சங்கங்கள் 48 மணி நேர வேலை நிறுத்தத்தை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டுள்ளன.  இன்று (11) மற்றும் நாளையும் (12) பணிப்பகிஷ்கரிப்பு  இடம்பெறும் என்று தெரியவந்துள்ளது.

நுவரெலியாவிலும் கண்டியிலும்  உள்ள 100 வருடங்களைத் தாண்டிய புராதன தபால் நிலையங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளமையை  விலக்கிக்கொள்ள  வேண்டும்  மற்றும்,  அஞ்சலகப் பணியாளர்களுக்கு 20,000 ஆயிரம்  ரூபாய் சம்பள  உயர்வு  ஆகிய  கோரிக்கைகளை  முன்வைத்தே  இந்த  பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும்  பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில்  நாடளாவிய  ரீதியில்  உள்ள  அனைத்து  அஞ்சலக  ஊழியர்களும்  இணைந்து  கொண்டதினால்  தபால்  சேவைகளும்  தபாலகத்தினூடாக  வழங்கப்படும்  பிற  சேவைகளும் முடங்கியுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments