Monday, September 16, 2024
Google search engine
Homeஉலகம்சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது? - நாசா வெளியிட்ட தகவல்

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது? – நாசா வெளியிட்ட தகவல்

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அவர்கள் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. 80 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள நிலையில் இருவரும் இன்றி ஸ்டார் லைனர் விண்கலம் பூமிக்கு திரும்ப உள்ளது.

இந்நிலையில், விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா, புட்ச் இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது. 8 நாட்கள் ஆய்வுக்காக விண்வெளிக்கு சென்ற இருவரும் தற்போது 8 மாதங்களாக விண்வெளியில் தங்கி இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

போயிங் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்ற சுனிதா, புட்ச் இருவரும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments