Tuesday, March 18, 2025
Google search engine
Homeஇந்தியாகடந்த 5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், மத சுற்றுலாவில் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு மத்தியில், அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது என்று அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

இந்த தொகை பிப்ரவரி 5, 2020 முதல் பிப்ரவரி 5, 2025 வரை செலுத்தப்பட்டதாக அவர் கூறினார். இதில் ரூ.270 கோடி சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜி.எஸ்.டி.) செலுத்தப்பட்டதாகவும், மீதமுள்ள ரூ.130 கோடி பல்வேறு வரி வகைகளின் கீழ் செலுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சுமார் 10 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், தற்போது அயோத்தி ஒரு முக்கிய மத சுற்றுலா மையமாக மாற்றியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

மகா கும்பமேளாவின் போது 1.26 கோடி பக்தர்கள் அயோத்திக்கு வருகை தந்தனர். கடந்த ஆண்டில், அயோத்திக்கு 16 கோடி வருகை தந்தனர். அதில் 5 கோடி பேர் ராமர் கோவிலுக்கு வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅமெரிக்க தேசிய நுண்ணறிவு பிரிவின் இயக்குநர் துளசி கப்பார்டு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவர் புதுடெல்லியில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலை நேற்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், இந்தோ-அமெரிக்க உறவுகளில் பல்வேறு அம்சங்களை பற்றி இருவரும் விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசில் முக்கிய பொறுப்பேற்றுள்ள கப்பார்டின் 2-வது சர்வதேச பயணம் இதுவாகும். இதன்படி, அவர் ஜப்பான், தாய்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கும் அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்துள்ள துளசி கப்பார்டு, டெல்லியில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் ரெய்சினா பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக நாளைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். இதற்காக அவர்கள் இன்று காலை முதல் இந்தியாவுக்கு வரிசையாக வந்து சேர்ந்துள்ளனர். இந்த கூட்டத்தில் இந்திய அதிகாரிகள் மற்றும் பிற நாட்டு அதிகாரிகளையும் சந்தித்து, கப்பார்டு இருதரப்பு கூட்டங்களை நடத்த இருக்கிறார் என டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Next articleசப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை அடித்துக்கொன்ற கும்பல்; அதிர்ச்சி சம்பவம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments