Friday, October 18, 2024
Google search engine
Homeஇலங்கைஇன்று ஆரம்பமாகவிருந்த போரட்டம் இடைநிறுத்தப்பட்டது

இன்று ஆரம்பமாகவிருந்த போரட்டம் இடைநிறுத்தப்பட்டது

ஜனவரி மாத சம்பளத்துடன் கூடிய DAT கொடுப்பனவை தற்காலிகமாக இடைநிறுத்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய கடிதம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுகாதார நிறுவனங்களின் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.

அத்துடன், ஜனவரி மாதத்திற்கான வழமையான சம்பளப் பட்டியலின் ஊடாக DAT கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளாத வைத்தியர்களுக்கு விசேட வவுச்சர் மூலம் உரிய கொடுப்பனவை வழங்குமாறும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இன்று (24) காலை 8 மணி முதல் ஆரம்பிக்கப்படவிருந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு அதன் நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments