Saturday, July 27, 2024
Google search engine
Homeஇந்தியாஉயரதிகாரி என கூறி... பெண் டி.எஸ்.பி.யுடன் திருமணம்; பல லட்சம் மோசடி

உயரதிகாரி என கூறி… பெண் டி.எஸ்.பி.யுடன் திருமணம்; பல லட்சம் மோசடி

உத்தரபிரதேச மாநிலத்தில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருபவர் ஸ்ரேஸ்தா தாக்கூர். இவரது கூர்மையான போலீஸ் திறனால் இவரை ‘லேடி சிங்கம்’ என அனைவரும் அழைத்தனர்.

இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மேட்ரிமோனியல் மூலம் அறிமுகம் ஆன ரோகித் ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ரோகித், தன்னை ஒரு ஐ.ஆர்.எஸ். அதிகாரி என ஸ்ரேஸ்தாவை நம்பவைத்து திருமணம் செய்துள்ளார். மேலும் இவரிடம் இருந்து ரோகித் லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.

நாளடைவில் ரோகித் உண்மையான ஐ.ஆர்.எஸ் அதிகாரி இல்லை என்பதை அறிந்த ஸ்ரேஸ்தா, தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டார். இருப்பினும் அதனை வெளிகாட்டிக்கொள்ளாமல் சகித்துக்கொண்டு இருந்தார்.

இந்நிலையில் ரோகித், ஸ்ரேஸ்தாவின் பெயரை பயன்படுத்தி பலரிடம் பல லட்சம் மோசடி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரேஸ்தா தனது 2 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ரோகித்தை விவாகரத்து செய்தார்.

இதன்பின்னும் திருந்தாத ரோகித் தனது மோசடி வேலையை தொடர்ந்துள்ளார். இதனை அறிந்த ஸ்ரேஸ்தா, தனது முன்னாள் கணவர் ரோகித் மீது காசியாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து ரோகித்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments