Friday, October 18, 2024
Google search engine
Homeஇலங்கைமாணவர் எண்ணிக்கை 50 ஆயிரம் குறைந்துள்ளது

மாணவர் எண்ணிக்கை 50 ஆயிரம் குறைந்துள்ளது

நாட்டில் பிறப்பு சதவீதம் குறைந்தமையால், பாடசாலைகளுக்கு உள்ளீர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரம் குறைந்துள்ளது என கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு ஐந்து வயது நிறைவடைந்தவுடன் மாணவர்களாக உள்ளீர்க்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

பாடசாலைகளுக்கு தற்போது உள்ளீர்க்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 90 ஆயிரம் பேராகும். எனினும், இன்றைக்கு பத்து வருடங்களுக்கு முன்னர், பாடசாலைகளுக்கு 3 இலட்சத்து 40 ஆயிரம் பிள்ளைகள் உள்ளீர்க்கப்பட்டனர் என்றார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்வியமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments