Saturday, October 19, 2024
Google search engine
Homeஇலங்கைமத்ரஸா பள்ளியிலிருந்து சிறுவன் சடலமாக மீட்பு

மத்ரஸா பள்ளியிலிருந்து சிறுவன் சடலமாக மீட்பு

சாய்ந்தமருது, மத்ரஸா பள்ளி ஒன்றிலிருந்து  மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில்  தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் குறித்த மாணவன் மீட்கப்பட்டதாக  அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் காத்தான்குடியை சேர்ந்த 13 வயதுடைய எம்.எஸ்.முஷாப் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments