Sunday, September 8, 2024
Google search engine
Homeஇந்தியாகள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் - கணவனை கொன்று நாடகமாடிய பெண் சிக்கினார்

கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் – கணவனை கொன்று நாடகமாடிய பெண் சிக்கினார்

கள்ளக்காதலை கண்டித்த கணவனை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு உடல் நலக்குறைவால் இறந்ததாக அவரது மனைவி நாடகமாடினார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் சிக்கினார்.

சென்னை வில்லிவாக்கம் சிக்கோ நகர் 57-வது தெருவைச் சேர்ந்தவர் கவுஷா பாஷா (வயது 48). இவரது மனைவி ஷாஜிதா பானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கவுஷா பாஷாவுக்கு நுரையீரல் நோய், சர்க்கரை நோய் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டதாக அவரது மனைவி ஷாஜிதா பானு கூறினார். இதுகுறித்த உறவினர்கள் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுஷா பாஷா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் அவர் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரது மனைவி ஷாஜிதா பானுவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷாஜிதா பானு பாலியல் வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்கு சென்று வந்துள்ளார். மேலும் அவருக்கு பலருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை கவுஷா பாஷா கண்டித்ததால் சம்பவத்தன்று கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஷாஜிதா பானு உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவர் கழுத்தை துப்பட்டாவால் இருக்கி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலைவழக்காக மாற்றி கணவனை கொன்ற ஷாஜிதா பானுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments