Saturday, October 19, 2024
Google search engine
Homeஇந்தியாஉத்தரபிரதேசத்தில் பைக் மீது டிரக் மோதியதில் 3 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் பைக் மீது டிரக் மோதியதில் 3 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் அமேதி பகுதியின் நவ்கர் அருகே ஜகதீஷ்பூர்-மோஹங்கஞ்ச் சாலையில் வேகமாக வந்த டிரக் ஒன்று பைக் மீது அதிபயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பைக்கில் சென்ற 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் 3 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ராஜ்குமார் (26), அமித்குமார் (23), ஆகாஷ் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் டிரக்கை பறிமுதல் செய்து, தலைமறைவான டிரக் டிரைவரை தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments