Friday, October 18, 2024
Google search engine
Homeவிளையாட்டுடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய இணை தோல்வி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய இணை தோல்வி

டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி – காயத்ரி கோபிசந்த் இணை, மலேசியாவின் தீனா முரளிதரன் – பேர்லி டான் இணையுடன் மோதியது.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 21-19 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய இந்திய இணை, ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 17-21, 15-21 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தது.

இதன் மூலம் இந்த ஆட்டத்தை மலேசியாவின் தீனா முரளிதரன் – பேர்லி டான் இணை 19-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி – காயத்ரி கோபிசந்த் இணையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. தோல்வி கண்ட இந்திய இணை தொடரில் இருந்து வெளியேறியது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments