Friday, October 18, 2024
Google search engine
Homeவிளையாட்டுடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; காலிறுதியில் தோல்வி கண்ட பி.வி.சிந்து

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; காலிறுதியில் தோல்வி கண்ட பி.வி.சிந்து

டென்மார்க் நாட்டின் ஒடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்து – இந்தோனேசியாவின் கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தை முதல் செட்டை 21-13 என்ற புள்ளிக்கணக்கில் கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங்கும், ஆட்டத்தின் 2வது செட்டை 21-16 என்ற புள்ளிக்கணக்கில் பி.வி.சிந்துவும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டி அனல் பறந்தது.

இந்த செட்டில் அபாரமாக செயல்பட்ட கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங் 21-9 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். இறுதியில் இந்த ஆட்டட்தை 21-13, 16-21, 21-9 என்ற செட் கணக்கில் கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் அரையிறுதிக்கு முன்னேறினார். ஆட்டத்தில் தோல்வி கண்ட பி.வி.சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments