பெலியத்தையில் ஐந்து பேரைக் கொலை செய்ய துப்பாக்கிதாரிகள் வந்த ஜீப் வண்டி, காலி, வித்யாலோக பிரிவேனாவின் வாகன தரிப்பிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்று சுமார் 40 நிமிடங்களின் பின்னர், மாத்தறை – கம்புறுப்பிட்டி பிரதான வீதியில் கம்புறுப்பிட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்த வந்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் ஜீப்பில் இருந்து இறங்கி செல்லும் காட்சி சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
முன்னோக்கி சென்ற அவர் மீண்டும் கம்புறுப்பிட்டி பஸ் தரிப்பிடத்திற்கு வருவது அதில் பதிவாகியுள்ளது.
பின்னர் மாத்தறை நோக்கிச் சென்ற பஸ்ஸில் ஏறிய குறித்த நபர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த நபர் யார் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.