Saturday, July 27, 2024
Google search engine
Homeஉலகம்இந்திய கிரிக்கெட்டின் ஆணிவேரான அதனை அழித்து விடுங்கள் - மனோஜ் திவாரி வேதனை

இந்திய கிரிக்கெட்டின் ஆணிவேரான அதனை அழித்து விடுங்கள் – மனோஜ் திவாரி வேதனை

இந்தியா இன்று உலக கிரிக்கெட்டில் ஓங்கி நிற்பதற்கு உள்ளூர் போட்டியான ரஞ்சிக் கோப்பை தொடர்தான் ஆழமான விதையாக பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் ரஞ்சிக் கோப்பையில் அசத்தும் வீரர்களுக்கே இந்திய அணியில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் ரஞ்சிக் கோப்பையில் இருந்தே சுனில் காவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்ற பல ஜாம்பவான்கள் இந்தியாவுக்காக விளையாடி சாதனைகள் படைத்தனர்.

ஆனால் சமீப காலங்களாக ஐ.பி.எல். தொடரில் அசத்தும் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்யும் தேர்வுக் குழுவினர் ரஞ்சிக் கோப்பையில் அபாரமாக விளையாடும் வீரர்களை கண்டு கொள்வதில்லை. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் ஆணிவேராக கருதப்படும் ரஞ்சிக் கோப்பைக்கு இப்போதெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என முன்னாள் வீரர் மனோஜ் திவாரி வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே அதை நிறுத்தி அழித்து விடுமாறு தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வேதனையுடன் பதிவிட்டுள்ளது பின்வருமாறு;-

“இந்திய கிரிக்கெட்டின் காலண்டரில் அடுத்த சீசனில் இருந்து ரஞ்சிக் கோப்பை அழிக்கப்பட வேண்டும். இந்த வரலாற்று சிறப்புமிக்க கவுரவமான தொடரை காப்பாற்றுவதற்கு பல்வேறு அம்சங்களை உற்று நோக்க வேண்டியுள்ளது. ஏனெனில் இந்த தொடர் தன்னுடைய அழகையும் முக்கியத்துவத்தையும் இழந்து வருகிறது. அதை பார்ப்பது முற்றிலும் விரக்தியை ஏற்படுத்துகிறது. எனவே அதை நிறுத்தி அழித்து விடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments