முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (12) அதிகாலை இந்தியா சென்றுள்ளார். இன்று அதிகாலை 2.50 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர் டெல்லிக்கு புறப்பட்டார்.
இந்தியாவின் விசேட அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்திய விஜயத்தின் பின்னர் அவர் அமெரிக்கா செல்லவுள்ளார்.