நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் போர்வையில் இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் அட்டவணையை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் இடமளிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “மக்களின் வாக்குரிமையை அழிக்க முற்பட்டால், அதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் என்ற பெயரில் ஜனாதிபதி தனது பதவிக் காலத்தை நீடிக்கச் செய்யும் நோக்கங்களுக்கு சமகி ஜன பலவேகய (SJB) பிடிபடாது” என அவர் மேலும் தெரிவித்தார்.