Sunday, September 8, 2024
Google search engine
Homeஇலங்கைபுதுக்குடியிருப்பில் 18 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை

புதுக்குடியிருப்பில் 18 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில்  சடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு – இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயதுடைய மாணவியான நிதர்சினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டில் பெற்றோர்கள், உறவினர்கள் இல்லாத நிலையில் குறித்த மாணவி தனது அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து பிரதேசவாசிகள், அயலவர்கள் இணைந்து குறித்த மாணவியை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments