Saturday, September 21, 2024
Google search engine
Homeஇலங்கைஇரு பெண்கள் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் மூவர் காயம்

இரு பெண்கள் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் மூவர் காயம்

இரண்டு பெண்கள் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மீகஹகிவுல – தல்தென பகுதியில் நேற்று (01) மாலை 6.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த ஆறு வயது சிறுமி மற்றும் இரண்டு பெண்கள் மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் இருந்த பெண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீகஹகிவுல – தல்தென, கல்கெலந்த பிரதேசவாசிகளே இவ்வாறு தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை வைத்தியசாலை பொலிஸார் மற்றும் கந்தகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments