சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிராக கைச்சாத்திடப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை மறுதினம் 5 ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளதாக எதிர்கட்சியின் பிரதம கொறடாவும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
தீர்மானத்தில் கையெழுத்திடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்தப் பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பல எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க ஏற்கனவே முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.