Monday, September 16, 2024
Google search engine
Homeஇலங்கைவாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். பொத்துஹெர, பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்திலேயே இவர்கள் உயிரிழந்தனர்.

குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மரக்கறி லொறியுடன் எதிர்த் திசையில் வந்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் விபரம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments