Monday, September 16, 2024
Google search engine
Homeஇலங்கைஅசிட் வீச்சில் ஐவர் காயம்

அசிட் வீச்சில் ஐவர் காயம்

இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று (06) காலை  அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த அசிட் வீச்சில் ஐந்து பேர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகன விபத்து தொடர்பான வழக்கு ஒன்றிற்காக வந்து கொண்டிருந்த நபர் ஒருவரை இலக்கு வைத்து இந்த அசிட் வீச்சு நடத்தப்பட்ட நிலையில், அப்போது வீதியில் பயணித்த பெண் ஒருவரும் மூன்று குழந்தைகளும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு சிங்கள புத்தாண்டு தினத்தன்று இரத்தினபுரி சமன் தேவலாயத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தின் பிரதான சந்தேகநபர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த கார் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் தந்தையே இவ்வாறு அசிட் வீச்சை நடத்தியுள்ளார். அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments