தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று காலை 06.00 மணியளவில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதையடுத்து, ரயில் பாதையை சீரமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது.
தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மலையகத்தின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் போக்குவரத்துக்களுக்கும் தடை ஏற்பட்டுள்ளது.