Friday, October 18, 2024
Google search engine
Homeஇலங்கைகோட்டாபயவை வெளியேற்ற சூழ்ச்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை - சம்பிக்க ரணவக்க

கோட்டாபயவை வெளியேற்ற சூழ்ச்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை – சம்பிக்க ரணவக்க

ஜனாதிபதி  பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், அவரது முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நுகேகொட நாவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொருளாதார படுகொலையாளி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே கடந்த காலம் பற்றி புத்தகம் எழுதுவது பயனற்றது. ராஜபக்ஷர்களின் வியாக்கியானத்தை நாட்டு மக்கள் கவனத்தில் கொள்வதில்லை.

தேசிய மற்றும் சர்வதேசத்தின் சதியினால் தான் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றதாக கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிடுவது நகைப்புக்குரியது என அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments