Sunday, September 8, 2024
Google search engine
Homeஇலங்கைகடலில் காணாமல் போன மூன்று மீனவர்களும் கரை திரும்பினர்

கடலில் காணாமல் போன மூன்று மீனவர்களும் கரை திரும்பினர்

கடற்தொழில் நடவடிக்கைகளுக்காக கடந்த 6 ம் திகதி மூன்று பேருடன் கடலுக்குள் சென்று காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் இயந்திர படகு மற்றும் அதில் பயணித்த மீனவர்கள் மூவரும் நேற்று (08) பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடற்தொழில் நடவடிக்கைகளுக்காக மூன்று மீனவர்கள் பயணித்த இயந்திர படகு கரை திரும்பவில்லை என அந்த இயந்திர படகின் உரிமையாளர் கற்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில் 6 ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்படும் இயந்திரப் படகுடன் ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்த 21, 37 மற்றும் 38 வயதுடைய மூன்று மீனவர்களும் இரண்டு நாட்களின் பின்னர் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இயந்திரக் கோளாறு காரணமாக குறித்த படகு இயங்காமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments