புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெப்ரவரி 26 ஆம் திகதி நியமித்தார்.
தென்னகோன் தற்போதைய பதவிக்கு முன்னர், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபராக (SDIG) பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.