மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக செயற்படும் போது அவர் தங்கியிருந்த கொழும்பு மஹாகமசேகர மாவத்தையில் அமைந்துள்ள வீடு அவர் ஓய்வு பெற்ற பிறகும் அவருக்கு வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவையின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, 2019 அக்டோபர் 15ஆம் திகதி உரிய வீட்டை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.