எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05) காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் அழைக்கப்படவுள்ளனர்.
இலங்கை மத்திய வங்கி உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (01) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.