அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டு இன்று பகல் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.