சாந்தனின் மரணம் தொடர்பில் தமிழக அரசையும் இந்திய அரசையும் குற்றம் சாட்ட வேண்டி இருக்கிறது என சாந்தனின் சட்டத்தரணியாக செயற்பட்ட பாண்டியன் புகழேந்தி இன்று (05) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.
“சாந்தன் 32 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அதற்கு பின் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்ட பின் மத்திய அரசு ஒரு உத்தரவை அறிவித்தது.
அந்த உத்தரவில் இலங்கையை சேர்ந்த அவர் இலங்கைக்கு செல்லும் வரை திருச்சியிலுள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சாந்தன் மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் தொடர்ச்சியாக பல முறை கடிதங்களை அனுப்பி இருந்தார். தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.