Saturday, July 27, 2024
Google search engine
Homeஇலங்கைநம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் 19 ஆம் திகதி

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் 19 ஆம் திகதி

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்தில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்ளடக்கப்பட்டிருந்தது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட 5 நாட்களுக்குப் பிறகு விவாதிக்கப்படும். இதன்படி எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னரான ஒரு நாளில் குறித்த பிரேரணையை விவாதம் செய்ய முடியும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

எவ்வாறாயினும், எதிர்வரும் 19ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ள நிலையில், குறித்த வாரத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments